Saturday, June 18, 2011

0

காதல் செய்யும் ரசாயன மாற்றங்கள்-ஆதலினால் காதல் செய்வீர்

“காதல், காதல், காதல்
காதல் போயின் சாதல் சாதல் சாதல்”


பாரதியையே பாடாய் படுத்தியுள்ளது இந்த மூன்றெழுத்து வார்த்தை.

கவிஞர்கள் எல்லோருக்கும் பாடுபொருளாய் உள்ள இந்த காதல் அப்படி என்ன மந்திரத்தை தன்னுள் கொண்டிருக்கிறது?

`காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு! உடல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்கின்றனர் அறிஞர்கள்.

அன்பு, நட்பு, நம்பிக்கை, பொறுப்பு ஆகிய நான்கு தூண்களின் மீது கட்டப்படும் அழகிய மாளிகை. இயல்பான காதல் என்பது முதலில் நம்பிக்கையில் தொடங்கும். பொறுப்புணர்வு முழுமையாக இருக்கும். அதன் பின்னரே காமம் வரும். நம்பிக்கை, பொறுப்புணர்வு, காமம் இவை முன்றும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே உண்மையான காதலாகும்..

காதல் என்பது பாலியல் ரீதியானதாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. பெற்றோர்கள், குழந்தைகள், உறவினர்களுடன் நீங்கள் மன ரீதியாக சாதகமான தொடர்புகளைக் கொண்டிருக்கும் போது, மதிப்புக்கு உரியவராக உணர்வீர்கள். இத்தகைய மதிப்பு வாய்ந்த காதலால் கிடைக்கும் நன்மைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

மனவிரக்தி:

காதல் சூழலில் வாழ்பவர்களுக்கு மனவிரக்தி மற்றும் உளரீதியான துன்பங்கள் வருவது குறைவு என்கின்றன ஆய்வுகள். மாறாக தனியே வாழும் பலரும் விரக்தியுறுவதும், மது, போதை போன்றவற்றை நாடுவதும், அவற்றிற்கு அடிமையாவதும் அதிகம். அதே போல தனிமைப்பட்டவர்கள் மனவிரக்திக்கு ஆளாவது அதிகம் என்பதை பல ஆய்வுகள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றன.

மனப்பதற்றம்:

புதிதாக காதல் வயப்பட்டவர்களைவிட நீண்ட காலமாக நேசமான உறவில் இருப்பவர்களுக்கு மனப்பதற்றம் ஏற்படுவது குறைவு என கண்டறியப்பட்டுள்ளது. MRI பரிசோதனைகள் மூலம் மூளையின் பகுதிகளை பரிசோதித்ததில் இது தெரிய வந்துள்ளது.

வலிகளைத் தாங்கும் தன்மை:

மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளுக்கு உடல்வலி, தலைவலி ஆகியன ஏற்படுவது குறைவாம். MRI பரிசோதனைகள் மூலம் வலிகளைத் தாங்கும் மூளையின் பகுதி அதிகமாகச் செயற்பட்டு வலி தோன்றுவதைக் குறைக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ரத்த அழுத்தம்:

மணமுடித்து மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளின் இரத்த அழுத்தம் மற்றவர்களைவிடக் குறைவாக இருக்கிறது. தனியாக இருப்பவர்களுக்க சற்று அதிகமாகவும் உள்ளது. மணமுடிப்பதால் மட்டும் இரத்த அழுத்தம் குறைந்து விடுவதில்லை. மகிழ்ச்சியாக வாழ்வதே முக்கியம் என்பதை இந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

காய்ச்சல் அதிகம் வராது:

காதல் வயப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் காய்ச்சல், போன்ற தொல்லைகள் அடிக்கடி ஏற்படாது. சிறிய காயங்கள் தாமாகவே விரைவில் குணமாகிவிடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நீண்ட ஆயுள்:

தனித்து இருப்பவர்களை விட திருமணம் முடித்தவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள். திருமண உறவால் , பரஸ்பர ஆதரவும், பிள்ளைகளின் உதவியும், நிதி தட்டுப்பாடின்மையும் காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்கு மேலாக தாம் காதலிக்கப்படுகிறோம், ஆதரவுள்ளவர்கள் என்ற உணர்வு அவர்களுக்கு உடல்நலத்தையும் நீடித்த வாழ்வையும் கொடுக்கிறது.

காதலின் மிகப் பெரிய கொடை:

குடும்ப வருமானத்தையும் வாழ்க்கை வசதிகளையும் விட பரஸ்பர அன்பும், நெருக்கமான உறவும், மனமொத்த காதலும் முக்கியமானது. அது ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது.

இவை வெற்று வார்த்தைகள் அல்ல விஞ்ஞானபூர்வமாகவும் நிறுவப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஆதலினால் காதல் செய்வீர் - இதுவும் பாரதி சொன்னதுதான்!

0 comments:

0

துண்டு போட்டு இடம் பிடித்துக் கொடுத்தவரிடம் இதயத்தைப் பறி கொடுத்த மாணவி

திருச்சி: ரயிலில் உட்கார துண்டு போட்டு இடம் கொடுத்த போர்ட்டர் மீது ஒரு தலைக் காதல் கொண்ட கல்லூரி மாணவி, வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறேன், ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்டதால் அந்த போர்ட்டர் அதிர்ச்சியாகி போலீஸாரிடம் முறையிட்ட கதை திருச்சியில் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஏழைத் தம்பதியின் மகள் ரஞ்சிதா. 19 வயதான இவர்தான் அந்த வீட்டில் முதல் முதலில் பிளஸ்டூ பாஸ் செய்தவர். தற்போது திருச்சியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

தினசரி மணப்பாறையிலிருந்து ரயில் மூலம் திருச்சி வந்து கல்லூரிக்குப் போய் விட்டு மாலையில் ஊர் திரும்புவார் ரஞ்சிதா.

அவருக்கு கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த, திருச்சி ரயில் நிலையத்தில் போர்ட்டராக பணியாற்றும் ஒருவர், ஒரு நாள் ரயிலில் உட்கார துண்டு போட்டு இடம் பிடித்துக் கொடுத்தார். இதில் அவர்களுக்குள் நட்பு ஏற்படவே, தினசரி அவர் ரஞ்சிதாவுக்கு துண்டு போட்டு இடம் பிடித்துக் கொடுக்க ஆரம்பித்தார்.

தன் மீது அந்த போர்ட்டருக்கு தனிப் பிரியம் ஏற்பட்டதாக உணர்ந்த அந்தப் பெண், போர்ட்டரை காதலிக்க ஆரம்பித்துள்ளார். இது போர்ட்டருக்குத் தெரியாது.

தினசரி அந்த போர்ட்டரைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை ரஞ்சிதாவால். அவர் ஒரு நாள் வராவிட்டாலும் கூட மனசு ஒரு மாதிரி ஆகி விடுமாம். இந்த நிலையில், ரஞ்சிதா ஏழைப் பெண் என்பதால் அவ்வப்போது பேனா உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுப்பார் அந்த போர்ட்டர். இதை காதல் பரிசாக நினைத்துக் கொண்ட ரஞ்சிதா, போர்ட்டர் மீதான காதலை வலுவாக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் ஒரு நாள் போர்ட்டரைப் பார்த்து நான் உங்களை காதலிக்கிறேன் என்று கூற அவருக்கு ஒன்றும் புரியவில்லை. நான் உங்களைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன். வீட்டை விட்டு வந்து விடுகிறேன். நாம் ஓடிப் போய் விடலாம் என்று கூற போர்ட்டருக்கு பெரும் அதிர்ச்சியாகி விட்டது.

இப்படிச் சொல்லிய அடுத்த நாள் இரவில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து போர்ட்டருக்குப் போன் செய்து நான் வந்து விட்டேன் என்று அவர் கூற போர்ட்டர் விரைந்து வந்து தனது நிலையைக் கூறியுள்ளார். நான் ஒருபோதும் உன்னைக் காதலிக்கவில்லை என்று விளக்கியுள்ளார். இதைக் கேட்டதும் ரஞ்சிதா அழ ஆரம்பித்து விட்டார்.

இதைப் பார்த்த மகளிர் காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து என்ன ஏது என்று விசாரித்துள்ளனர். போர்ட்டர் நடந்ததை விளக்கிக் கூற ரஞ்சிதாவின் ஒரு தலைக் காதல் குறித்து போலீஸாருக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து ரஞ்சிதாவின் குடும்பத்திற்குத் தகவல் தெரிவித்து பெற்றோரை வரவழைத்தனர். அவர்களும் அழுதபடி ஓடி வந்தனர்.

பின்னர் காவல் நிலையத்தில் வைத்து ரஞ்சிதாவுக்கு போலீஸார் புத்திமதி கூறினர். இதையடுத்து தனது பெற்றோருடன் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

0 comments:

0

நீலகிரியில் அமையும் 'நியூட்ரினோ' ஆராய்ச்சி மையம்

நீலகிரியில் நியூட்ரினோ ஆராய்ச்சி நிலையம் அமையவுள்ளது.

இது தொடர்பாக இந்திய அணு சக்திக் கழகத்தின் தலைவர் அனில் ககோட்கர் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

கதிர்வீச்சு கொண்ட தனிமங்கள் சிதையும் போதோ அல்லது அணு இணைவு, அணு பிளவின்போதோ, சூரியக் கதிர்கள் பட்டு அணுக்கள் சிதையும் போதோ உருவாகும் இயற்கையான அணுத் துகள் தான் நியூட்ரினோ. பெரும்பாலும் சூரியனில் நிகழும் அணு இணைவின்போது இது உருவாகிறது.

ஒளியின் வேகத்தில் பயணிக்கும் இந்தத் துகள் கிட்டத்தட்ட எடையே இல்லாதது. இதை கண்டுபிடிப்பதே கடினம்.

சூரியனிலிருந்து கிளம்பும் இந்த நியூட்ரினோக்கள் பூமியில் தங்கு தடையின்றி உலா வருகின்றன. சராசரியாக ஒரு மனிதனி்ன் உடலில் ஒரு வினாடிக்கு 50 டிரில்லியன் நுழைந்து வெளியேறுகின்றன.

இந்த நியூட்ரினோக்களை 'பிடிப்பது' மிக மிகக் கடினம். இதற்காக ஜப்பானில் ஒரு மாபெரும் அண்டர்கிரவுண்ட் ஆராய்ச்சி மையம் (Super K) உள்ளது. ஹிடா நகரில் உள்ள இந்த ஆராய்ச்சி மையம் தரைக்கு அடியில் 1000 மீட்டருக்குக் கீழே அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள 41.4 மீட்டர் உயரம், 39.3 விட்டம் கொண்ட மாபெரும் தொட்டிகளில் மிகவும் தூய்மைப்படுத்தப்பட்ட நீர் தான் நியூட்ரினோக்களை பிடிக்க உதவும் கருவியாகும்.

ஆனால், இவ்வளவு பெரிய இந்த தொட்டியில் சிக்குவது ஆண்டுக்கு சில நியூட்ரினோ துகள்களே.

இவ்வளவு இன்ட்ரஸ்டிங்கான இந்த நியூட்ரினோவால் பூமிக்கு ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து இதுவரை ஏதும் தெரியவில்லை. மேலும் நியூட்ரினோக்களை முழுமையாக ஆராய்ந்தால் அண்டம் எப்படி தோன்றியது என்பதை அறியதும் எளிதாகும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதனால் நியூட்ரினோ குறித்த ஆர்வம் உலகெங்கும் அதிகரித்து வருகிறது.

இப்போது இந்த ஆராய்ச்சியில் இந்தியாவும் இறங்கியுள்ளது.

இதற்கான ஆய்வு மையம் அமைக்க மிகவும் தனிமையான, மாசு இல்லாத இடம் வேண்டும். மேலும் இயற்கையான சுரங்கங்கள் வேண்டும். நாடெங்கும் இந்திய அணு சக்திக் கழகம் நடத்திய ஆய்வில் தமிழகத்தின் நீலகிரி மலைப் பகுதியே இதற்கு உகந்தது என்று தெரியவந்துள்ளது.

அங்குள்ள பைகரா மின் நிலையத்துக்கு 2 கி.மீ. தொலைவில் 2,207 மீட்டர் உயரத்தில் மசினகுடி அருகே உள்ள ஒரு குன்றில் 1,300 மீட்டர் ஆழம் கொண்ட மாபெரும் சுரங்கம் உள்ளது.

இந்த இடத்தில் ஆய்வு மையத்தை அமைக்க அணு சக்திக் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி அளித்துவிட்ட நிலையில் முதல்வர் கருணாநிதியை ககாட்கர் தலைமையிலான விஞ்ஞானிகள் சந்தித்து நியூட்ரினோ ஆய்வு மையம் குறித்து விளக்கி மையத்தை அமைக்க இடம் கோரினர்.

இதற்கு முதல்வர் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார். அதற்கு முன் அப் பகுதியில் வசிக்கும் மக்களிடமும் இத் திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கி அவர்களது சந்தேகங்களையும் போக்க நடவடிக்கை எடுக்குமாறு அணு சக்தி விஞ்ஞானிகளிடம் முதல்வர் கேட்டுக் கொண்டார்.

இந்த திட்டத்திற்காக மத்திய அணுசக்தித் துறை ரூ.900 கோடி ஒதுக்கியுள்ளது.

0 comments:

0

ரூ. 1,50,000 கோடி சொத்துக்களை விற்கும் பிரிட்டிஷ் பெட்ரோலியம்

ஏ.கே.கான்

அமெரிக்கா அருகே மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு வழங்கவும் பல ஆயிரம் சதுர கி.மீ. பரப்பில் கடலில் சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் சுமார் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை விற்க பிரிட்டிஷ் பெட்ரோலியம் முடிவு செய்துள்ளது.

இந்த நிறுவனத்தின் கடலடி எண்ணெய் துரப்பன கருவியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் அமெரிக்கா அருகே 1,50,000 சதுர கி.மீ. கடல் பரப்பில் பெட்ரோலியம் விரவி நிற்கிறது. இதனால் லட்சக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் பலியாகியுள்ளன. அமெரிக்காவின் தென் பகுதிகளில் சுமார் 950 சதுர கி.மீ பரப்பில் மீன்பிடித் தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அந் நாட்டின் 4 மாகாணங்களில் சுற்றுலாத் தொழிலும் முடங்கிப் போய் பல ஆயிரம் பில்லியன் டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு நஷ்டஈடு தர வேண்டியது பிரிட்டிஷ் பெட்ரோலியம் தான் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறிவிட்டார்.

மேலும் கடல் பகுதியில் உள்ள எண்ணெய்யை நீக்க வேண்டிய பொறுப்பும் இந்த நிறுவனத்தையே சாரும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

மேலும் பிரிட்டிஷ் பெட்ரோலியத்திடம் நஷ்டஈடு கோரி அமெரிக்கா உள்பட பல நாடுகளில் ஆயிரக்கணக்கான வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

அடுத்த 7 ஆண்டுகளுக்கு இந்த நிறுவனத்துக்கு கடலில் எண்ணெய் எடுக்க தடை விதிக்கும் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் பல அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற எம்பிக்கள் கோர ஆரம்பித்துள்ளனர்.

இதனால் ஏற்படு்ம் எதிர்கால இழப்பைக் கருத்தில் கொண்டு முடிந்தவரை மிக வேகாக நஷ்டஈட்டை தந்துவிட இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்கு சுமார் ரூ. 1,50,000 கோடி அளவுக்கு பணம் தேவைப்படும் என்பதால் பிரிட்டிஷ் பெட்ரோலியம் உலகின் பல பகுதிகளில் உள்ள தனது கிளைகளை, கச்சா எண்ணெய் கிணறுகளை, சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது.

வியட்நாமின் உள்ள நாம் கான் சோன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள தனது முதலீடான சுமார் ரூ. 5,000 கோடியைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதில் உள்ள தனது பங்குகளை வேறு நிறுவனத்திடம் விற்க எச்எஸ்பிசி வங்கியின் உதவியை பிரிட்டிஷ் பெட்ரோலியம் நாடியுள்ளது.

இதை வாங்க இந்திய பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி, பெட்ரோ வியட்நாம், மலேசியாவின் பெட்ரோனாஸ், தாய்லாந்தின் பிடிடிஇபி ஆகிய நிறுவனங்கள் போட்டி போட ஆரம்பித்துள்ளன.

மேலும் அபாச்சி கார்பரேசன் நிறுவனத்தில் உள்ள தனது ரூ. 35,000 கோடி மதிப்புள்ள பங்குகளையும் பிரிட்டிஷ் பெட்ராலியம் விற்கிறது.

அதே போல கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான போட்ஸ்வானா, தான்சானியா, நமீபியா, மலாவி, ஜாம்பியா ஆகியவற்றில் உள்ள தனது ஆயிரக்கணக்கான பெட்ரோலிய விற்பனை நிலையங்களையும் விற்க பிரிட்டிஷ் பெட்ரோலியம் முடிவு செய்துள்ளது.

இதை வாங்க இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனமும் எஸ்ஸார் ஆயில் நிறுவனமும் முயன்று வருகின்றன. ரிலையன்ஸ் சுமார் ரூ. 2,000 கோடிக்கு இதை வாங்கத் தயாராக உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், எஸ்ஸார் ஆயில் நிறுவனம் ரூ 2,500 கோடி தர முன் வந்துள்ளது.

அதே போல வெனிசுவேலாவில் இரு எண்ணெய் நிறுவனங்களில் உள்ள தனது முதலீட்டை ரஷ்யாவின் டிஎன்கே நிறுவனத்திடம் விற்கவும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் பேச்சு நடத்தி வருகிறது.

மேலும் அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள மாபெரும் புருதோயி பே எணணெய் கிணறுகள், அர்ஜென்டினாவில் உள்ள பான் அமெரிக்கன் எனர்ஜி நிறுவனம், பாகிஸ்தான், கொலம்பியா, எகிப்தில் உள்ள முதலீடுகளையும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் விற்கலாம் என்று தெரிகிறது.

இதற்கிடையே இதுவரை சுமார் ரூ. 1,300 கோடியளவுக்கு இந்த நிறுவனம் நஷ்டஈடு வழங்கிவிட்டது. மேலும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் மேலும் ரூ. 300 கோடியை நஷ்டஈடாகத் தரப் போவதாகவும் அறிவித்துள்ளது.

நஷ்டஈடுகள், கசிவால் ஏற்பட்ட நஷ்டம், எண்ணெய்க் கசிவைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றால் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு சுமார் ரூ. 1,60,000 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதை சமாளிக்கவே உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் உள்ள தனது ரூ. 1,50,000 கோடி மதிப்புள்ள தனது பங்குகளை இந்த நிறுவனம் வி்ற்கவுள்ளது.

இதற்கிடையே எண்ணெய் கசிவு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கசிவு ஏற்பட்ட எண்ணெய் கிணறை நிரந்தரமாகவே மூடிவிடவும் முடிவு செய்துள்ளது.

இந்த எண்ணெய் கசிவைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் பங்குகளின் மதிப்பு 40 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் உலக பெட்ரோலிய வரலாற்றிலேயே மாபெரும் நஷ்டத்தை உருவாக்கிய இந்தக் கசிவு, பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத் தலைவர் டோனி ஹேவர்டின் பதவியையும் காவு வாங்கிவிட்டது. அவருக்குப் பதிலாக பாப் டட்லியை அந்த நிறுவனம் புதிய தலைவராக நியமித்துள்ளது.

0 comments:

0

ரூ. 1,50,000 கோடி சொத்துக்களை விற்கும் பிரிட்டிஷ் பெட்ரோலியம்

ஏ.கே.கான்

அமெரிக்கா அருகே மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு வழங்கவும் பல ஆயிரம் சதுர கி.மீ. பரப்பில் கடலில் சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் சுமார் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை விற்க பிரிட்டிஷ் பெட்ரோலியம் முடிவு செய்துள்ளது.

இந்த நிறுவனத்தின் கடலடி எண்ணெய் துரப்பன கருவியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் அமெரிக்கா அருகே 1,50,000 சதுர கி.மீ. கடல் பரப்பில் பெட்ரோலியம் விரவி நிற்கிறது. இதனால் லட்சக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் பலியாகியுள்ளன. அமெரிக்காவின் தென் பகுதிகளில் சுமார் 950 சதுர கி.மீ பரப்பில் மீன்பிடித் தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அந் நாட்டின் 4 மாகாணங்களில் சுற்றுலாத் தொழிலும் முடங்கிப் போய் பல ஆயிரம் பில்லியன் டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு நஷ்டஈடு தர வேண்டியது பிரிட்டிஷ் பெட்ரோலியம் தான் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறிவிட்டார்.

மேலும் கடல் பகுதியில் உள்ள எண்ணெய்யை நீக்க வேண்டிய பொறுப்பும் இந்த நிறுவனத்தையே சாரும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.

மேலும் பிரிட்டிஷ் பெட்ரோலியத்திடம் நஷ்டஈடு கோரி அமெரிக்கா உள்பட பல நாடுகளில் ஆயிரக்கணக்கான வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

அடுத்த 7 ஆண்டுகளுக்கு இந்த நிறுவனத்துக்கு கடலில் எண்ணெய் எடுக்க தடை விதிக்கும் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் பல அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற எம்பிக்கள் கோர ஆரம்பித்துள்ளனர்.

இதனால் ஏற்படு்ம் எதிர்கால இழப்பைக் கருத்தில் கொண்டு முடிந்தவரை மிக வேகாக நஷ்டஈட்டை தந்துவிட இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்கு சுமார் ரூ. 1,50,000 கோடி அளவுக்கு பணம் தேவைப்படும் என்பதால் பிரிட்டிஷ் பெட்ரோலியம் உலகின் பல பகுதிகளில் உள்ள தனது கிளைகளை, கச்சா எண்ணெய் கிணறுகளை, சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது.

வியட்நாமின் உள்ள நாம் கான் சோன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள தனது முதலீடான சுமார் ரூ. 5,000 கோடியைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதில் உள்ள தனது பங்குகளை வேறு நிறுவனத்திடம் விற்க எச்எஸ்பிசி வங்கியின் உதவியை பிரிட்டிஷ் பெட்ரோலியம் நாடியுள்ளது.

இதை வாங்க இந்திய பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி, பெட்ரோ வியட்நாம், மலேசியாவின் பெட்ரோனாஸ், தாய்லாந்தின் பிடிடிஇபி ஆகிய நிறுவனங்கள் போட்டி போட ஆரம்பித்துள்ளன.

மேலும் அபாச்சி கார்பரேசன் நிறுவனத்தில் உள்ள தனது ரூ. 35,000 கோடி மதிப்புள்ள பங்குகளையும் பிரிட்டிஷ் பெட்ராலியம் விற்கிறது.

அதே போல கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான போட்ஸ்வானா, தான்சானியா, நமீபியா, மலாவி, ஜாம்பியா ஆகியவற்றில் உள்ள தனது ஆயிரக்கணக்கான பெட்ரோலிய விற்பனை நிலையங்களையும் விற்க பிரிட்டிஷ் பெட்ரோலியம் முடிவு செய்துள்ளது.

இதை வாங்க இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனமும் எஸ்ஸார் ஆயில் நிறுவனமும் முயன்று வருகின்றன. ரிலையன்ஸ் சுமார் ரூ. 2,000 கோடிக்கு இதை வாங்கத் தயாராக உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், எஸ்ஸார் ஆயில் நிறுவனம் ரூ 2,500 கோடி தர முன் வந்துள்ளது.

அதே போல வெனிசுவேலாவில் இரு எண்ணெய் நிறுவனங்களில் உள்ள தனது முதலீட்டை ரஷ்யாவின் டிஎன்கே நிறுவனத்திடம் விற்கவும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் பேச்சு நடத்தி வருகிறது.

மேலும் அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள மாபெரும் புருதோயி பே எணணெய் கிணறுகள், அர்ஜென்டினாவில் உள்ள பான் அமெரிக்கன் எனர்ஜி நிறுவனம், பாகிஸ்தான், கொலம்பியா, எகிப்தில் உள்ள முதலீடுகளையும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் விற்கலாம் என்று தெரிகிறது.

இதற்கிடையே இதுவரை சுமார் ரூ. 1,300 கோடியளவுக்கு இந்த நிறுவனம் நஷ்டஈடு வழங்கிவிட்டது. மேலும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் மேலும் ரூ. 300 கோடியை நஷ்டஈடாகத் தரப் போவதாகவும் அறிவித்துள்ளது.

நஷ்டஈடுகள், கசிவால் ஏற்பட்ட நஷ்டம், எண்ணெய்க் கசிவைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றால் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு சுமார் ரூ. 1,60,000 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதை சமாளிக்கவே உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் உள்ள தனது ரூ. 1,50,000 கோடி மதிப்புள்ள தனது பங்குகளை இந்த நிறுவனம் வி்ற்கவுள்ளது.

இதற்கிடையே எண்ணெய் கசிவு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கசிவு ஏற்பட்ட எண்ணெய் கிணறை நிரந்தரமாகவே மூடிவிடவும் முடிவு செய்துள்ளது.

இந்த எண்ணெய் கசிவைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் பங்குகளின் மதிப்பு 40 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் உலக பெட்ரோலிய வரலாற்றிலேயே மாபெரும் நஷ்டத்தை உருவாக்கிய இந்தக் கசிவு, பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத் தலைவர் டோனி ஹேவர்டின் பதவியையும் காவு வாங்கிவிட்டது. அவருக்குப் பதிலாக பாப் டட்லியை அந்த நிறுவனம் புதிய தலைவராக நியமித்துள்ளது.

0 comments:

0

விண்வெளியில் 553 நாட்கள் உயிரோடு இருந்த பாக்டீரியாக்கள்!

ஏ.கே.கான்

தெற்கு இங்கிலாந்தின் கடலோரத்தில் சிறிய மலைப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பாக்டீரியாக்கள் காற்றே இல்லாத விண்வெளியில் சுமார் 553 நாட்கள் உயிரோடு இருந்து, பல்கிப் பெருகி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளன.

இங்கிலாந்தின் டெவோன் பகுதியில் பீர் எனப்படும் கிராமத்தின் கடலோர மலைப் பகுதியில் இருந்து எடுக்கபட்ட கற்களில் ஒட்டியிருந்த இந்த பாக்டீரியாக்கள் விண்ணில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி மையத்தின் வெளியே 2008ம் ஆண்டில் அந்த கற்களோடு சேர்த்து வைக்கப்பட்டன.

காற்றில்லாத, கதிர்வீச்சு நிறைந்த, கடும் வெப்ப மாறுபாடுகள் நிறைந்த அந்த வெற்றிட சூழலில் இவை எத்தனை நாட்கள் உயிரோடு தாக்குப் பிடிக்கின்றன என்பதை ஆராய்ந்தனர்.

ஆனால், சுமார் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து, இந்த பாக்டீரியாக்களில் ஏராளமானவை உயிரோடு உள்ளன. அல்ட்ரா வயலட் கதிர்வீச்சில் ஆரம்பித்து அனைத்து விதமான அபாயகரமான கதி்ர்வீச்சுக்கள், கடும் வெப்பம்-மிகக் கடுமையான குளிர் என பல சுற்றுச்சூழல் தாக்குதல்களை இவை எப்படித் தாக்குப் பிடித்தன என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோஸின்தஸிஸ் எனப்படும் சூரிய ஒளியைக் கொண்டு தங்களுக்குத் தேவையான உணவு, ஆக்ஸிஜனைத் தயாரித்துக் கொள்ளும் இந்த பாக்டீரியாக்கள் அபாயகரமான கதிர்வீச்சுக்களை எப்படித் தாங்கின என்று தெரியவில்லை. இதற்கான பதில் அவற்றின் டி.என்.ஏக்களில் இருக்கலாம் என்று தெரிகிறது.

இதன்மூலம் பூமிக்கு உயிர் வேறு கிரகத்தில் இருந்து தான் வந்தது என்ற 'தியரிக்கு' அதிக பலம் கிடைத்துள்ளதாக நாஸா கூறியுள்ளது. நுண்ணிய உயிர்கள் விண் கற்களில் ஒட்டிக் கொண்டு கிரகங்களை விட்டு கிரகங்கள் பயணிப்பது சாத்தியமே என்பதை இந்த பாக்டீரியாக்கள் நிரூபித்துவிட்டன என்கிறார்கள்.

இப்போது பூமிக்கு கொண்டு வரப்பட்டுவிட்ட இந்த பாக்டீரியாக்கள் இங்கிலாந்தின் மில்டன் கெய்ன்ஸ் பல்கலைக்கழகத்தில் (Open University (OU) in Milton Keynes) ஆராயப்பட்டு வருகின்றன.

இந்த பாக்டீரியாக்களின் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் வெளியிடப்படவில்லை. 'OU-20' என்று மட்டுமே குறிப்பிடப்படும் இந்த பாக்டீரியா 'Gloeocapsa' என்ற பாக்டீரியாவைப் போன்றே தடினமான செல் சுவர் கொண்டது.

இவை வி்ண்வெளியில் இத்தனை காலம் தப்பியதற்கு அதன் தடிமனான செல் சுவரும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். மேலும் இந்த பாக்டீரியாக்கள் கூட்டாக இணைந்து காலனியாக மாறி, அதன் நடுப் பகுதியில் இருந்த பாக்டீரியாக்களை கடும் வெப்பம், கதிர்வீச்சில் இருந்து காப்பாற்றியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். அத்தோடு கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டு வாழ்வதற்கான சத்துக்களை இவற்றின் டி.என்.ஏக்கள் தயாரித்திருக்கலாம் என்று தெரிகிறது.

பல்கலைக்கழகத்தில் இந்த பாக்டீரியாக்களை இப்போது ஆராய்ந்து வரும் குழுவின் தலைவரான டாக்டர் கெரன் ஓல்ஸ்ஸான் பிரான்சிஸ் கூறுகையில், இந்த வகை பாக்டீரியாக்களைக் கொண்டு ஆக்ஸிஜனைத் தயாரிக்கலாம், வாயுக்கள் உள்பட அனைத்தையும் 'ரீ-சைக்கிள்' செய்யலாம். பாறைகளில் இருந்து கனிமங்களைப் பிரித்தெடுக்கவும் கூட பாக்டீரியாக்களை பயன்படுத்த முடியும் என்கிறார்.

0 comments:

0

இங்கிலாந்தில் டிசைனர் பிரா, பேண்டீஸ்களுக்கு கிராக்கி அதிகரிப்பு

இப்போதைய பெண்களிடையே தங்களது அந்தரங்க அழகை ஆராதனை செய்யும் மோகம் அதிகமாக உள்ளதாம். பேண்டீஸ் மற்றும் பிராக்களின் விற்பனை அதிகரிப்பு மட்டுமல்லாமல் குவிந்து வரும் புதுப் புது டிசைன்களும், விதம் விதமான மாடல்களும் இதை நிரூபிப்பதாக உள்ளது. இதனால் இவற்றின் விற்பனையும் இதுவரை இல்லாத அளவுக்கு பெருமளவில் அதிகரித்துள்ளதாம்.

முன்பை விட இப்போது பிராக்கள் மற்றும் பேண்டீஸ்களின் விற்பனை வெகுவாக உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 117 சதவீத உயர்வைக் கண்டுள்ளதாம் இவற்றின் விற்பனை.

உலக அளவில் இந்த விற்பனை அதிகரிப்பு காணப்படுகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் பிராக்கள் மற்றும் பேண்டீஸ்களில் பல்வேறு விதமான மாடல்கள் இந்த காலகட்டத்தில் குவிந்திருக்கின்றனவாம். எத்தனை டிசைன்களை அறிமுகப்படுத்தினாலும் அவை பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகிறதாம். புதிய மாடல்களைக் கேட்டு வரும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாம்.

பெண்களுக்கான உள்ளாடைகளில் பிராக்களுக்குத்தான் நிறைய டிசைன்களை அறிமுகப்படுத்துகின்றனர் டிசைனர்கள். பல்வேறு விதமான, வடிவிலான, பிராக்களின் பெருக்கத்தால் பெண்களுக்கு 'சூஸ்' செய்வதற்கு இப்போது நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன.

முன்பெல்லாம் பிராக்களை அணிவதோடு பெண்கள் நின்று விடுவார்கள். இப்போது தங்களது மார்புகளின் தேவைக்கேற்ப அணிய விரும்புகிறார்கள். இதுவும் பிரா மாடல்கள் அதிகரிப்புக்கு ஒரு காரணம்.

மேலும், பிரபல நடிகைகள், மாடல் அழகிகள் அணியும் பிராக்கள் மற்றும் பேண்டீஸ்களும் இப்போது பெண்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி அதே டிசைன், மாடலைக் கேட்டு வர ஆரம்பித்துள்ளனராம்.

சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த ஒரு பேஷன் டிசைன் நிறுவனம் புதிய வகை மாடல் பிராவை அறிமுகப்படுத்தியது. அது விற்பனைக்கு வந்த சிறிது நேரத்திலேயே அத்தனை கடைகளிலும் விற்றுப் போய் விட்டதாம். முன்கூட்டியே அந்த பிரா குறித்து நிறைய விளம்பரப்படுத்தியிருந்ததால் பெண்களிடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வந்து பிராக்களை அள்ளிக் கொண்டு போய் விட்டனர்.

இதுகுறித்து உள்ளாடை விற்பனையக உரிமையாளர் ஒருவர் கூறுகையில், முன்பை விட இப்போது உள்ளாடைகள் மீது பெண்களுக்கு புதிய மோகம், கூடுதல் அக்கறை பிறந்துள்ளது. முன்பெல்லாம் எந்தவித டிசைனும் இல்லாமல், பிரா மற்றும் பேண்டீஸ் அணிந்து வந்த பெண்கள் இப்போது டிசைன்களை எதிர்பார்க்கிறார்கள்.

விதம் விதமான மாடல்களை அவர்கள் விரும்புகிறார்கள். எப்படி வெளி உடைகளை விதம் விதமானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அதேபோல இப்போது உள்ளாடைகளையும் விதம் விதமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

முன்பு மார்பழகு குறித்து அதிகம் மெனக்கெடாத பெண்கள் இப்போது விதம் விதமான பிராக்களின் மூலம் தங்களது மார்பழகை சிறப்பாக வெளிப்படுத்துவதில் அக்கறை காட்டுகிறார்கள். அதற்கேற்ப பல்வேறு வகையான பிராக்கள் மார்க்கெட்டில் தற்போது உள்ளது.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை பிரா மட்டும் வாங்க பெண்கள் ஆண்டுக்கு 2700 பவுண்டுகள் வரை செலவழிக்கிறார்களாம். அதேபோல ஒவ்வொரு பெண்ணிடமும் குறைந்தது 16 வகையான பிராக்கள் இருக்கிறதாம்.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், இங்கிலாந்துப் பெண்களின் மார்பு அளவு சமீப ஆண்டுகளில் சராசரியாக 34பி என்பதிலிருந்து 36 டியாக உயர்ந்துள்ளதாம்.

பிரா, பேண்டீஸ் தவிர பின்னழகை எடுப்பாக காட்டக் கூடிய வகையிலான ஜீன்ஸ் பேன்ட்டுகள் உள்ளிட்ட மேலும் பல அழகு சமாச்சாரங்களும் கடைகளில் கல்லாக் கட்டிக் காத்திருப்பதால், தங்களது உடல் அழகைக் கூட்டிக் கொள்ளும் பெண்களின் அளவும் அதிகரித்தபடியே போகிறதாம்.

பெரிய மார்பு உள்ளவர்களுக்குத்தான் டிசைன்கள் என்றில்லாமல், சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கும், அவர்களது மார்பழகை எடுப்பாக காட்டக் கூடிய வகையிலான பிராக்களும் மார்க்கெட்டில் ஏராளமாக இருப்பதால் அவற்றின் விற்பனையும் அள்ளிக் கொண்டு போகிறதாம்.

0 comments:

Friday, June 17, 2011

0

காதலை வெற்றிகரமாக்குவதில் யார் கில்லாடி

காதல்…. ஒரு மென்மையான உணர்வு. அதை உணர்வது பிரத்யேகமான ஒன்று. காதலிப்பதை காட்டிலும் காதலிக்கப்படுவது அனைவருக்கும் பிடித்தமானது. நம்மை நேசிக்க ஒருவர் இருக்கிறார், என்ற நினைவே உற்சாகத்தையும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்தி நம்மை சாதிக்க வைக்கும்.


காதலிக்கும் தருணங்கள் மிக இனிமையானவை. சின்ன சின்னதாய் அழகிய பரிசுப் பொருட்கள், மாலை நேர சந்திப்புகள், பட்டும் படாமலும் அருகாமையில் பயணிக்க நேரும் தருணங்கள், கண நேர சந்திப்புகளிலும் காவியம் பேசும் பார்வைகள், எதிர்பாராது நிகழும் ஸ்பரிசங்கள் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்க வைக்கும்.

காதல் மொட்டாக மலர்ந்து, திருமண பந்தத்தில் மணம் வீசும் மலராகி, வருடங்கள் ஆன பின்னும் என்றும் உதிராது நிரந்தரமாக இருக்க வேண்டும். அந்த காதல்தான் உண்மையானது. அத்தகைய காதலை வெற்றியாக்கி திருமண வாழ்க்கையிலும் சாதிக்க சில

யோசனைகள்:

மனதளவில் தயாராகவேண்டும்

திருமணத்திற்கு மனதளவில் தயாரான பிறகே காதலை திருமணத்திற்குரிய கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். அதுவரை காதலிப்பதில் தவறில்லை.

தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க வேண்டும். மற்றவர்களின் நிர்பந்தத்திற்கு பயந்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேண்டாம்.

வாழ்க்கைத்துணையின் பழக்க வழக்கங்கள், குணாதிசயங்கள், ரசனைகள் இவையெல்லாம் கடைசி வரை ஒத்துப்போகுமா? என்று பார்க்க வேண்டியது அவசியம்.

இயல்பாய் இருங்கள்

காதலிக்கும் நபர்கள் இயல்பான குணத்துடன் பேசிப்பழகுங்கள். முதலில் இயல்பை மறைத்துவிட்டு திருமணத்திற்குப்பின்னர் இயல்பான குணம் வெளிப்படும் போதுதான் பிரச்சினை உருவாகிறது.

வாழ்க்கை பந்தத்தில் இவருடன் இணைந்தால் சரிவராது என்று மனதில்பட்டால், உடனே பக்குவமாக பேசி உறவை முறித்துக்கொள்வதில் தவறில்லை.

நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை உங்கள் துணையுடன் திருமணத்திற்கு முன்பே பேசிவிடுவது சிறந்தது. திருமணத்திற்கு பிந்தைய குழப்பங்கள் ஏற்படுவதை இது தவிர்க்க உதவும். குடும்ப உறுப்பினர்கள் பற்றியும், அவர்களின் குணாதிசயங்களைப்பற்றியும் காதலிக்கும் போதே பேசிவிடுவது மிகவும் முக்கியம்.

காதல் என்பது எதுவரை

தன்னை விரும்பும் ஆண் உலகத்திலேயே தன் மீது மட்டும்தான் அதிக அளவில் காதல் கொண்டவனாக இருக்க வேண்டும் என்பது பெண்களின் அதிக பட்ச எதிர்பார்ப்பு.

காதலில் பெண்கள், உள்ளத்திற்கே முதலிடம் தருகிறார்கள். ஆண்கள், அழகிற்கே முக்கியத்துவம் தருகின்றனர்.

காதலிக்கும் பொழுது இருந்த ஆத்மார்த்தமான நெருக்கம், கல்யாணமாகி இரு குழந்தைகள் பிறந்ததும், குறைந்து விடுகிறது. எனவே காதலை உடல் ரீதியாக அணுகுவதை விட உள்ளரீதியாக அணுகுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.

யாராக இருந்தாலும் நூறு சதவிகிதம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாது. நம்முடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் எண்பது சதவிகிதம் ஒத்துப்போகும் நபர் நமக்கு துணையாய் அமைந்தால் மணம் முடித்து வாழ்க்கைப் பயணத்தை இனிதாக தொடங்குவதில் தவறில்லை.

0 comments:

0

மங்கையரின் மனதை கவரும் வழிமுறைகள்

பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின் கவலை. என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பதுதான் இன்றைய தலைமுறை இளைஞர்கள் சிலரது ஆதங்கம். இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர். ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது.


உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும் என்று பலருக்கு தெரிவதில்லை. பெண்களை மனதை கவருவது எப்படி என்பது குறித்து உங்களுக்காக சில யோசனைகள்:

கவர முயற்சிக்க வேண்டாம்

இது என்ன விளையாட்டு? என்று ஏராளமானோர் கேட்பது காதில் விழுகிறது. நிஜமாகவே இது உண்மைதான். நாம் எதற்காகவாவது அதீத முயற்சி செய்தால் அது கிடைக்கும் வரை நமக்கு போராட்டம்தான். பெண்கள் விசயத்தில் இது ஒரு படி மேலாகவே இருக்கும். பெண்களை கவர நீங்கள் பெரும் முயற்சி செய்யாமல் இருந்தாலே வெற்றி உங்கள் பக்கம்தான். இதுதான் பெண்களை கவருவதற்கான முதல் ரகசியம்.

நீங்கள் உங்கள் வேலையில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி பெற்றாலே அனைவரின் பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். பெண்களின் கவனத்தையும் எளிதில் கவரலாம். இந்த ரகசியத்தை புரிந்து கொள்ளாமல் ஏராளமான ஆண்கள் தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெண்களிடையே வெறுப்பை சம்பாதிக்கின்றனர்.

புத்திசாலித்தனத்தை நிரூபியுங்கள்

பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால் பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று அநேக ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர். நீங்கள் பணத்தினால் பெண்களை கவர முயலும் பட்சத்தில் உங்களை விட உங்கள் பணத்தின் மீதுதான் பெண்களின் கவனம் இருக்கும். ஆகவே உண்மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப்ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி.

புதிதாக சிந்தியுங்கள்

பெண்களின் மனதை கவரவேண்டும் என்பதற்காக எத்தனையோ ஆண்கள் பகீரத பிரயத்தனம் செய்கின்றனர். அதையெல்லாம் கண்டு வெறுப்புற்றிருக்கும் பெண்களிடம், நீங்களும் பழைய பாணியை பின்பற்றி முயற்சி செய்தால் கதைக்கு உதவாது!. எனவே இயல்பாக இருந்து உங்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துங்கள். பெண்களை கவரைவேண்டும் என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி பேசாதீர்கள். நிறைய படித்து விசய ஞானத்தோடு பேசுங்கள். உலக நடப்புகளை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

தோற்றம் முக்கியம்

என்னதான் புத்திசாலியாக இருந்தாலும் தோற்றத்திலும் சிறிது கவனம் செலுத்த வேண்டும். சுத்தமான உடை, கம்பீரமான தோற்றம், போன்றவையும் ஆண்களைப்பற்றி பெண்களிடையே ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தும். உங்களின் தோற்றத்திற்கும் செயல்பாட்டிற்கும் ஒத்துப்போகவேண்டும். அதற்காக மிகைப்படுத்தப்பட்ட அலங்காரமோ, செயல்பாடுகளோ தேவையில்லை. சுத்தமாக இருங்கள். உங்கள் எண்ணங்களை இயல்பாய் வெளிப்படுத்துங்கள். அத்தகைய ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

பெண்களின் மன ஆழம்

பெண்களின் மனதை புரிந்து கொள்வது என்பது எவராலும் முடியாது. எத்தனையோ அறிஞர்களும், ஞானிகளும் கூட இந்த விசயத்தில் தோற்றுத்தான் போயிருக்கின்றனர். ஆண்களின் எண்ணத்திற்கு எதிராகத்தான் அநேக பெண்கள் சிந்திக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தலைமுறை தலைமுறையாக பெண்களின் மனதைக் கவர ஆண்கள் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கின்றனர். என்னதான் பெண்களுக்குப் பிடிக்கும் ? என்று குழம்பித்தான் போகின்றனர் ஆண்கள். இன்றைய 21- ம் நூற்றாண்டு இளைஞர்களிடையும் இந்த சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. எனவே மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினாலே நீங்கள் பெண்களின் உள்ளம் கவர் கள்வன் ஆவது நிச்சயம்.

0 comments:

0

பெண்ணின் எதிர்பார்ப்புகள் என்னென்ன? Connect with ஐபோன்4-தமிழில் படிக்க உதவும் டெளன்லோட்

அன்பும், அரவணைப்பும் நிறைந்த வாழ்க்கைதான் நிறைவானது என்று பெரும்பாலான பெண்கள் கருதுகின்றனர். தன் வாழ்க்கைத் துணைவரிடம் இருந்து வெறும் உடல்ரீதியான தொடர்பை மட்டுமே அவர்கள் விரும்புவதில்லை. நேசம் மிகுந்த வார்த்தைகளைத்தான் பெண்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

இந்த விசயம் ஆண்களுக்குத் தெரியாமல் போகும்போதுதான் கருத்து மோதல்கள் ஏற்பட்டு விரிசல்கள் தோன்றுகின்றன. பெண்களின் மனதை புரிந்து கொண்டு உரிமையோடு நேசத்தை வெளிப்படுத்தினால் உறவுகள் வலுப்படும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

ஆறுதலாய் பேசுங்கள்

பேச்சுதான் பெண்களின் விருப்பத்திற்குரிய செயல். திருமணத்திற்கு முன்பு வரை உறவுகளோடும், நண்பர்களோடும் சந்தோசமாய் பேசிக்கழித்த பொழுதுகள் அடிக்கடி பெண்களின் நினைவுகளில் நிழலாடும். இது போன்ற சமயங்களில் ஆறுதலாய் பேசினால் அது பெண்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும். உங்களின் காதலையும், அன்பையும் முதலில் பேச்சின் மூலம் வெளிப்படுத்துங்கள்.

நடந்து கொண்டே படிப்பது எத்தனை சுகமானதோ, அதுபோல இல்லறத் துணையுடன் நடந்து கொண்டே பேசுவது இனிமையானது. நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த நடை பேச்சு உதவும்.

இதய சிம்மாசனம்

திருமணம் செய்தவர்களின் வாழ்க்கையில் உடலுறவு என்பது பிரிக்க முடியாதது. எந்த வித வருத்தமும், வலியும் இன்றி அதனை அனுபவிக்க வேண்டும். இந்த விசயத்தில் பெண்களை ஜெயித்த ஆண்கள் நிரந்தரமாக பெண்களின் இதய சிம்மாசனத்தில் அமரலாம்.

தனது வாழ்க்கைத் துணைவர் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து பெண்களுக்குமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். பல விசயங்களை அவர்கள் மனதுக்குள் கற்பனை செய்து பார்த்திருப்பார்கள். எனவே எனவே உறவுக்கு முன்பும் சரி, உறவின்போதும் சரி ஆண்கள் பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

விளையாட்டாக விளையாடுங்கள்

பெண்களைப் பொறுத்தவரை மன ரீதியான திருப்தியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஆண்களோ, காரியம் முடிந்தவுடன் மறந்து விடுவார்கள் சற்று முன் நடந்ததை. ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த இனிய உணர்வின் நினைவுகளில் சில மணி நேரங்களாவது மூழ்கிக் கிடப்பார்கள்.

மடியில் தலைசாய்ப்பது, விரலால் தலைகோதுவது, அன்பான, ஆறுதலான முத்தம், என சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை. இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை. இதில்தான் சிக்கலே ஆரம்பிக்கிறது.

நேரடியாக விசயத்தை தொடங்குவதை விதம் விதமான முன் விளையாட்டுகளை விளையாடுங்கள். இந்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தாலே உறவுகளில் விரிசல் விழ வாய்ப்பில்லை.

0 comments:

0

கற்பழிப்பை ஆயுதமாக பிரயோகிக்கிறார் கடாபி-ஹில்லாரி பாய்ச்சல் Connect with ஐபோன்4-தமிழில் படிக்க உதவும் டெளன்லோட்

வாஷிங்டன்: பெண்கள் மீது கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைகளை ஆயுதமாக பாவிக்கிறார்கள் லிபிய அதிபர் கடாபியின் ராணுவத்தினர் என்று குற்றம் சாட்டியுள்ளார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,லிபியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை, குறிப்பாக பாலியல் வன்முறை பெருமளவில் அதிகரித்துள்ளது. இது கவலை தருகிறது. தங்களுக்கு எதிராக பெண்கள் திரும்பி விடக் கூடாது என்பதற்காக கற்பழிப்பையும், பாலியல் வன்முறைகளையும் ஒரு போர் ஆயுதமாக கடாபியின் ராணுவத்தினர் பயன்படுத்துகின்றனர்.

மேலும் தங்களுக்கு எதிராக போராடும் பெண்கள் மீதும் பாலியல் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.

கன்னித்தன்மை சோதனை என்ற பெயரில் பெண்களை அவர்கள் சித்திரவதை செய்து பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்துகிறார்கள். பல்வேறு வகையான பாலியல் சித்திரவதைகளை அவர்கள் பெண்கள் மீது ஏவி விடுகிறார்கள்.

தங்களுக்கு எதிராக போராடும் ஆண்களை வழிக்குக் கொண்டு வர அவர்களது வீட்டுப் பெண்களை பிடித்து வைத்து அவர்களை பாலியல் கொடுமைகளுக்குள்ளாக்கி வருகிறது ராணுவம். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றார் ஹில்லாரி.

0 comments:

0

சிபிஐ பொய் வழக்குகளைக் கண்டித்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்-திமுக முடிவு

சென்னை: சிபிஐ திமுகவினர் மீது தொடர்ந்துள்ள பொய் வழக்குகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வது என்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தின் இறுதியில் திமுக வெளியிட்ட அறிக்கையில், 2ஜி வழக்கு விவகாரத்தை சட்டப்படியாக எதிர்கொள்வோம் என்றும், கலைஞர் டிவிக்கு கடனாக தரப்பட்ட பணத்தை லஞ்சம் போல சிபிஐ காட்ட முயல்வதற்கு கண்டனம் தெரிவித்தும், தமிழக சட்டமேலவை ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதே நேரத்தில் மத்தியில் காங்கிரசுடனான கூட்டணி குறித்து திமுக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தங்களை காங்கிரஸ் கைவிட்டதோடு மட்டுமல்லாமல், குறி வைத்துத் தாக்கி வருவதாகவும் திமுக கருதுகிறது. இதையடுத்து கூட்டணியை மறுபரிசீலனை செய்ய இன்று மாலை உயர் மட்டக் கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது.

இந்தக் கூட்டத்தையொட்டி இன்று காலை முதல் மூத்த தலைவர்களுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தி வந்தார். அதில், இனியும் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கக் கூடாது என்று கருணாநிதி கூறியதாகவும் அதை அழகிரி உள்ளிட்டோர் எதிர்த்ததாகவும் கூறப்படுகிறது.

இப்போதைய நிலையில் கூட்டணியை விட்டு வெளியேறுவது நமக்கு மேலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று அழகிரி தரப்பு கூறுவதாகத் தெரிகிறது. அழகிரியின் கருத்தை மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், நெப்போலியன், பழனிமாணிக்கம் உள்ளிட்டோரும் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

இதனால் கூட்டணியை முறிக்காமல் மத்திய அமைச்சரவையிலிருந்து மட்டும் வெளியேறலாம் என்று சில தலைவர்கள் கருணாநிதியிடம் கூறியிருந்தனர்.

இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கலாம் என்பது குறித்து கனிமொழியிடமும் கருணாநிதி ஆலோசனை கேட்டிருந்தார். நேற்று டெல்லி திகார் சிறைக்குச் சென்ற திமுக மூத்த தலைவரான துரைமுருகன் இது குறித்து கனிமொழியுடன் பேசியுள்ளார்.

ஆனால், தன்னை மையமாக வைத்து எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்றும், கட்சியின் எதிர்காலம்-நலனுக்கு எது சரியான முடிவாக இருக்குமோ அந்த முடிவை எடுக்குமாறு துரைமுருகனிடம் கனிமொழி கூறிவிட்டதாகத் தெரிகிறது.

இதனால் இன்றைய கூட்டத்தில் மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவது, வெளியிலிருந்து ஆதரிப்பது என்ற முடிவையே திமுக எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வழக்கம் போல எந்த முக்கிய முடிவையும் எடுக்காமல் சப்பென்று முடிந்து விட்டது திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி, மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், துரைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

- திமுகவினர் மீது சிபிஐ தொடர்ந்துள்ள பொய் வழக்குகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது.

- திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் மாற்றப்பட்டதற்கு கண்டனம்.

- தமிழகத்தில் சட்டமேலவை ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம்.

- சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்புக்கு வரவேற்பு. இந்தத் தீர்ப்பை ஏற்று நடப்பு ஆண்டே சமச்சீர் கல்வியைத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.

- ஜூன் 20 முதல் 30 வரை பொதுக் கூட்டங்கள் நடத்துவது.

- ஜூலையில் திமுக பொதுக் குழுவைக் கூட்டுவது.

- இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க்க கோரி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வரவேற்பு.

- சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பிரதமருடன் டி.ஆர்.பாலு திடீர் சந்திப்பு:

முன்னதாக திமுக எம்பியும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு நேற்று மாலை திடீரென பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

சென்னையில் இன்று நடக்கும் திமுக உயர்நிலை குழுவின் அவசரக் கூட்டத்தின் பின்னணி குறித்து அவர் விவரித்ததாகத் தெரிகிறது.

மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது என திமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று உளவுப் பிரிவினர் தனக்குத் தகவல் குறித்து டி.ஆர்.பாலுவிடம் அப்போது பிரதமர் விளக்கம் கேட்டதாகவும் தெரிகிறது.

இந் நிலையில் கூட்டணி குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்துவிட்டது இன்றைய திமுக கூட்டம். இதன்மூலம் இப்போதைக்கு கூட்டணியை விட்டு வெளியேறும் திட்டம் தன்னிடம் இல்லை என்று திமுக சுட்டிக் காட்டியுள்ளது. அதே நேரத்தில் சிபிஐ பொய் வழக்கு போட்டுள்ளதாக திமுக தனது தீர்மானத்தில் சுட்டிக் காட்டியுள்ளது, காங்கிரஸ் மீது திமுக மறைமுகமாக குற்றம் சாட்டுவதாகவே கருதப்படுகிறது.

இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி ஜூன் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் பொதுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது.

0 comments:

0

கனிமொழிக்கு ஜாமீன் தந்தால் ஆதாரங்களை அழிப்பார், சாட்சிகளை கலைப்பார்: சிபிஐ Connect with ஐபோன்4-தமிழில் படிக்க உதவும் டெளன்லோட்


டெல்லி: திமுக எம்பி கனிமொழியை ஜாமீனில் விடுவிக்க உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இன்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. அவரை விடுவித்தால் சாட்சிகளை கலைத்துவிடுவார், ஆதாரங்களை அழித்துவிடுவார் என்று சிபிஐ கூறியுள்ளது.

முறைகேடாக 2ஜி ஸ்பெக்ட்ரம் பெற்ற டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு ரூ.214 கோடி தரப்பட்டது தொடர்பாக கனிமொழியையும் அதன் நிர்வாகி சரத்குமாரையும் சிபிஐ கைது செய்தது. இந்தப் பணம் லஞ்சம் என்கிறது சிபிஐ. ஆனால், கடன் என்கிறது கலைஞர் டிவி.

இந் நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் கனிமொழியும் சரத்குமாரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.செளஹான் மற்றும் ஸ்வதந்தர் குமார் ஆகியோர், கலைஞர் டிவிக்கு வழங்கப்பட்ட பணம் குறித்தும், கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் குறித்தும் ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து நீதிமன்றத்தில் இன்று சிபிஐ ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

அதில் கனிமொழியும், சரத்குமாரும் முக்கிய சதியாளர்கள். மேலும் கலைஞர் டிவிக்கு தரப்பட்ட ரூ.214 கோடி ஊழல் பணம்தான், அது கடன் தொகை அல்ல. 2ஜி வழக்கில் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த இருவருக்கும் ஜாமீன் வழங்குவது முறையாக இருக்காது. முன்னதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றமும், பின்னர் டெல்லி உயர்நீதிமன்றமும் இந்த வழக்கில் பல்வேறு விவகாரங்களையும் கவனமாக பரிசீலித்து தான் இந்த இருவருக்கும் வழங்க மறுத்துவிட்டன. இதனால் உச்ச நீதிமன்றமும் ஜாமீன் தரக் கூடாது.

இவர்களை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைத்துவிடுவர், ஆதாரங்களை அழித்துவிடுவர் என்று சிபிஐயின் பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

0

மதுரை திமுக மேயர் தேன்மொழி மீது லஞ்ச வழக்கு-கைதாகிறார்?

மதுரை: மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை திமுக பிரமுகர் ஆக்கிமிரத்து கொள்ள உதவியதாக மதுரை திமுக மேயர் தேன்மொழி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அவருக்குத் துணை போனதாக மாநகராட்சி கமிஷனர், நகரமைப்பு அலுவலர் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக இலக்கிய அணிச் செயலாளரான சுந்தரராஜன் மதுரை மதிச்சயம் வடக்கு தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார். இந்த இடத்தை பதிவு செய்வதற்காக ஆவணங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மேயர் மற்றும் கமிஷனருக்கும் புகார்கள் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. மேயரின் தலையீட்டால் சர்வேயர் குருசாமி லஞ்சம் வாங்கிக் கொண்டு இடத்தை சுந்தரராஜனுக்கு கிரையம் செய்ததாக மதுரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெயராமன் என்பவரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஜோசப் டேவிட் கடந்த 14ம் பிறப்பித்த உத்தரவில், இந்தப் புகாரில் முகாந்திரம் இருப்பதால் இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பிக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின், நகரமைப்பு அலுவலர் முருகேசன், காண்ட்ராக்டர் மாணிக்கம் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

லஞ்சம் வாங்குதல், கூட்டுச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தேன்மொழி உட்பட அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

0 comments:

downloads

  • Love Records: - *W*e believe that every day is a *Valentine's Day* because someone somewhere is falling in love and that day is going to be the most important day in his/h...
    13 years ago
  • காதலிக்கக் கற்று கொள் ! - இத்தனை வருடமாய் கற்றுக் கொண்ட என் வாழ்க்கை ஒற்றை நொடியில் முடியும் முன்... நீ காதலிக்கக் கற்று கொள் !
    13 years ago

Total Pageviews

Twitter Updates

Meet The Author

Get In Touch

Powered by Blogger.

Blog Archive