Sunday, May 9, 2010

0

சிறிய விஷ​யங்​க​ளில் இருந்​து​தான் ஏரா​ளம் கற்​றுக் கொள்ள முடி​யும்:


"பிரம்​மாண்​டங்​க​ளைப் பார்த்​துப் பார்த்து,​​ சிறிய விஷ​யங்​க​ளைக் கண்​டு​கொள்​வ​தில்லை;​ ஆனால்,​​ அந்​தச் சிறிய விஷ​யங்​க​ளில்​தான் ஏரா​ள​மாக கற்​றுக் கொள்ள முடி​கி​றது' என்​றார் எழுத்​தா​ளர் எஸ்.​ ராம​கி​ருஷ்​ணன்.​​ ​ ​ திருச்சி சம​ய​பு​ரத்​தி​லுள்ள எஸ்​ஆர்வி மெட்​ரிக் மேல்​நி​லைப் பள்​ளி​யில் சனிக்​கி​ழமை நிறை​வ​டைந்த "கனவு மெய்ப்​பட'- 4 நாள் பயி​ல​ரங்​கில் அவர் மேலும் பேசி​யது:​​ ​ "அமெ​ரிக்க எழுத்​தா​ளர் தோரோ நடப்​பது பற்றி மட்​டும் 100 பக்​கங்​க​ளைக் கொண்ட புத்​த​கம் ஒன்றை எழு​தி​யுள்​ளார்.​ பூமி​யு​டன் நேர​டி​யா​கத் தொடர்​புள்​ளவை கால்​கள் மட்​டுமே.​ பள்​ளிக் காலங்​க​ளில் விளை​யா​டு​வ​தைத் தவிர கால்​க​ளுக்கு இப்​போது வேறெந்த வேலை​யும் நாம் கொடுப்​ப​தில்லை.​ சோம்​பேறி ஆவ​தற்கு முதல் அறி​குறி கால்​க​ளுக்கு எந்த வேலை​யும் கொடுக்​கா​த​து​தான்.​​ ​ சைபீ​ரிய பற​வை​கூட இந்​தி​யா​வுக்கு பறந்தே வரு​கி​றது.​ நாம் இங்​குள்ள தாஜ்​ம​கா​லைக்​கூட பார்க்​கச் செல்​வ​தில்லை.​ பய​ணம் செய்​வ​தி​லுள்ள அனு​ப​வம் வேறெ​தி​லும் கிடைக்​காது.​​ ​ கல்​விக் கூடங்​க​ளில் பயி​லும் கல்வி மனித வாழ்க்​கைக்கு நேர​டி​யாக பயன்​பட்​ட​தில்லை.​ வகுப்​பறை,​​ பாடங்​கள்,​​ தண்​ட​னைக்​குள்​ளேயே நாம் முடங்​கி​வி​டு​கி​றோம்.​​ ​ ரஷிய எழுத்​தா​ளர் ஆன்​டன் ஷெக்​காவோ தனது வீட்​டின் முன் இருந்த காலி​யி​டத்​தில் ஆசி​ரி​யர்​க​ளுக்​காக ஒரு முகாமை அமைக்​கப்​போ​வ​தா​கக் கூறி​னார்.​ ரஷிய ஆசி​ரி​யர்​கள் கம்​பீ​ரத்​து​டன் இருப்​ப​தில்லை;​ அவர்​க​ளைக் கண்​ட​றிய முடி​ய​வில்லை என அவர் குறிப்​பிட்​டார்.​​ ​ கல்வி என்​பது ஊதி​யம் பெறும் வேலை என்​ப​தோடு ஆசி​ரி​யர்​கள் நின்​று​வி​டு​கி​றார்​கள்.​ பணி​யாற்​றும் ஊரின் வர​லாறு,​​ அந்த மக்​க​ளின் பண்​பாடு போன்​ற​வற்​றைத் தெரிந்து கொள்ள ஆசி​ரி​யர்​கள் முனைப்பு காட்​டு​வ​தில்லை என்​ப​தெல்​லாம் ஷெக்​கா​வோ​வின் வருத்​தங்​கள்.​​ ​ நம் வகுப்​ப​றை​க​ளில்​தான் பேதங்​களே தொடங்​கு​கின்​றன.​ அடிமை முறையை ஒழித்து ஆயி​ரம் ஆண்​டு​க​ளா​கி​யும் தொலைக்​காட்​சி​கள் ஒரே நாளில் அடிமை முறையை நமக்​குக் கற்​றுக் கொடுத்து விடு​கின்​றன.​ வீடு​க​ளில் குழந்​தை​க​ளைப் பேசவே விடு​வ​தில்லை;​ தொலைக்​காட்​சி​கள்​தான் பேசிக் கொண்டே இருக்​கின்​றன.​​ ​ நாம் பிரம்​மாண்​டங்​களை நோக்​கியே பார்க்​கி​றோம்.​ அத​னால்,​​ சிறிய சிறிய விஷ​யங்​களை கண்​டு​கொள்​வ​தில்லை.​ உண்​மை​யில் சிறிய விஷ​யங்​கள்​தான்,​​ நமக்கு நிறைய கற்​றுத் தரு​கின்​றன.​​ ​ தன்​னை​விட 5 மடங்கு அதிக எடை கொண்​ட​வற்றை எறும்பு சுமக்​கி​றது.​ நாம் எறும்​பைக் கண்​ட​வு​டன் நசுக்​கிக் கொள்​கி​றோம்.​ அதில் நாம் சுகம் கொள்​கி​றோம்.​​ ​ ஒரு கல்லை எடுத்​தால்,​​ அதை யார் மீதா​வது வீசிப் பார்க்​கத்​தான் நாம் முனை​கி​றோம்.​ அந்​தக் கல் பெரிய மலை​யின் ஒரு பகுதி என்​றுப் பார்ப்​ப​தில்லை.​ கொஞ்​சம் கொஞ்​ச​மாக இந்த உலகை நர​க​மாக மாற்றி வரு​கி​றோம்.​ மனி​தர்​கள் தங்​க​ளி​ட​முள்ள சில சொற்​களை,​​ சிந்​த​னை​களை,​​ செய்​கை​களை மாற்​றிக் கொள்ள முன்​வர வேண்​டும்' என்​றார் எஸ்.​ ராம​கி​ருஷ்​ணன்.​​ ​ ஞாநி​ ​ ​ பயி​ல​ரங்கை ஒருங்​கி​ணைத்த எழுத்​தா​ளர் ஞாநி பேசி​யது:​​ ​ "ஒவ்​வொ​ரு​வ​ரும் உட​னடி இலக்கு,​​ நீண்​ட​கால இலக்கு மற்​றும் தனிப்​பட்ட இலக்கு,​​ சமூ​கத்​துக்​கான இலக்கு என்​றும் வகைப்​ப​டுத்​திக் கொள்ள வேண்​டும்.​ அந்த இலக்​கு​கள் நல்​ல​வை​க​ளா​க​வும்,​​ அன்பு சார்ந்​த​வை​யா​க​வும் இருக்க வேண்​டும்.​​ ​ பெற்​றோ​ருக்​கும்,​​ குழந்​தை​க​ளுக்​கும் இடை​யே​யுள்ள இரு​வேறு இலக்​கு​களை ஒரு புள்​ளி​யில் இணைய வைக்க வேண்​டி​யது முக்​கி​ய​மா​னது.​ மாறு​பட்ட கருத்து இருக்​க​லாம்.​ ஆனால்,​​ அது மோதல் சார்ந்​த​தாக இருக்​கக் கூடாது.​ அர​சி​யல்,​​ சினிமா,​​ கல்வி என எல்​லாத் துறை​க​ளி​லும் பல​வீ​னங்​க​ளை​யும்,​​ கோளா​று​க​ளை​யும் பார்க்​கி​றோம்.​ அடுத்த 50 ஆண்​டு​க​ளில் சமூ​கத்தை மாற்​றி​ய​மைக்​கும் இடத்​தில் நீங்​கள் இருக்​கப் போகி​றீர்​கள்' என்​றார் ஞாநி.​​ ​ தமிழ்ச்​செல்​வன்​​ ​ மற்​றொரு ஒருங்​கி​ணைப்​பா​ளர் எழுத்​தா​ளர் ச.​ தமிழ்ச்​செல்​வன் பேசி​யது:​​ ​ "24 மணி நேர​மும் கற்​றுக் கொள்​ப​வர்​கள் குழந்​தை​கள் மட்​டும்​தான்.​ பள்​ளிப் பரு​வத்​தில் கற்​றுக்​கொள்​ளும் எல்லா வழி​க​ளை​யும் அடைத்​து​வி​டு​கி​றோம்.​ அந்த கத​வு​கள் இப்​போ​து​தான் திறந்து விடப்​பட்​டி​ருக்​கின்​றன.​​ ​ இங்கு எல்​லா​மும் சிறப்​பாக சொல்​லித் தரப்​பட்​டி​ருக்​கின்​றன என்று சொல்ல முடி​யாது.​ ஆனால்,​​ கத​வு​கள் திறக்​கப்​பட வேண்​டும் என்​ப​தைச் சொல்​லி​யி​ருக்​கி​றோம்.​ இனி கற்​றுக் கொள்ள வேண்​டி​ய​து​தான்' என்​றார் தமிழ்ச்​செல்​வன்.​ ​​ ​ 4 நாள்​கள் நடை​பெற்ற இந்​தப் பயி​ல​ரங்கு குறித்து மாணவ,​​ மாண​வி​கள் சார்​பில் சிலர் பேசி​னர்.​ அவர்​கள் கூறி​யவை:​​ ​ "மாண​வர்,​​ மாணவி என்ற பாகு​பா​டின்​றிப் பழக வாய்ப்பு கிடைத்​தது.​ "வெளிக்​காற்று உள்ளே வரட்​டும்' என்ற தலைப்​பில் நடை​பெற்ற இந்​தப் பயி​ல​ரங்​கின் மூலம் சுத்​த​மான ஆக்​ஸி​ஜனை சுவா​சித்​த​தைப் போன்ற உணர்​வைப் பெற்​றோம்.​ நிறைய நண்​பர்​கள் கிடைத்​தார்​கள்.​ எங்​க​ளா​லும் முடி​யும் என்ற தன்​னம்​பிக்​கை​யைப் பெற்​றி​ருக்​கி​றோம்' ​ என்​ற​னர்.

0 comments:

downloads

  • Love Records: - *W*e believe that every day is a *Valentine's Day* because someone somewhere is falling in love and that day is going to be the most important day in his/h...
    14 years ago
  • காதலிக்கக் கற்று கொள் ! - இத்தனை வருடமாய் கற்றுக் கொண்ட என் வாழ்க்கை ஒற்றை நொடியில் முடியும் முன்... நீ காதலிக்கக் கற்று கொள் !
    14 years ago

Total Pageviews

Twitter Updates

Meet The Author

Get In Touch

Powered by Blogger.

Blog Archive